தாயகம்

இரகசியமாக நுழைந்து தேங்காய்களை எடுத்த இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை

இந்த சம்பவம் நேற்று மாலை 3.15 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தோட்டத்தின் பாதுகாவலரே குறித்த நபரை சுட்டுக்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹென்டியாகல பிரதேசத்தை சேர்ந்த தினேஷ் ஜானக என்ற 27 வயதுடைய இளைஞரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கிட்டத்தட்ட 50 ஏக்கருடனான இந்த தோட்டத்திற்குள் இரகசியமாக நுழைந்த இந்த நபர் கீழே விழுந்து கிடந்த தேங்காய்களை சேகரித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தோட்ட பாதுகாவலர் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.


0 comments:

Post a Comment

Powered by Blogger.