தாயகம்

சிறைச்சாலை வைத்தியசாலையில் தமிழ் கைதி

வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழ் அரசியல் கைதியொருவர் தாக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் பிரகாரம், அந்த கைதியை சந்திப்பதற்காக சட்டத்தரணிகள் சிலர் நேற்று (24) சிறைச்சாலை சென்றனர்.

நிலைமையைக் கண்காணிப்பதற்காக சிறைச்சாலை சென்றிருந்த சட்டத்தரணிகள் கூட்டாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

புதிய மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த கைதி, கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ள நிலையில், வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அதிகாலை 1.30 அளவில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கடும் நோய்வாய்ப்பட்டிருந்த கைதியை, வைத்தியசாலை கட்டிலில் இருந்து சிறைக்கூடத்திற்கு நகருமாறு பணித்துள்ளதாக சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், வைத்தியரின் ஆலோசனைப்படியே தாம் வைத்தியசாலையின் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்தக் கைதி சிறை அதிகாரியிடம் எடுத்துக்கூறியுள்ளார்.

இதனையடுத்து, கைதியை தகாத வார்த்தைகளால் திட்டிய சிறை அதிகாரி அவரை சிறைக்கூடப் பிரிவிற்கு நகருமாறு கட்டளையிட்டதுடன், மேலும் சில அதிகாரிகளும் இணைந்து கைதியை சிறைக்கூடப் பிரிவிற்கு பலவந்தமாக மாற்றியுள்ளதாக சட்டத்தரணிகளின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Powered by Blogger.