உலகம்

தாய்லாந்து நாட்டின் தென் பகுதி எல்லையில் அடுத்தடுத்து 15 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்

தாய்லாந்து நேரப்படி நேற்றிரவு 7 மணி முதல் 10.30 மணி வரை இந்த தொடர் குண்டு வெடிப்புகள் இடம்பெற்றுள்ளன.

இதில் 2 பொலிஸார் உயிரிழந்ததாகவும் மூவர் படுகாயமடைந்ததாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பொலிஸ் நிலையங்கள், பாதுகாப்புப் படையினரை இலக்கு வைத்து கையெறி குண்டுகள், வெடிபொருட்கள், துப்பாக்கிகள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல்கள் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

0 comments:

Post a Comment

Powered by Blogger.