தாயகம்

எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் வழமைக்கு

பெற்றோலிய தொழிற் சங்கங்கத்தினரின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக தடைப்பட்டிருந்த எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாக பெற்றோலிய அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் இன்று (25) பகல் அளவில் சீராக முன்னெடுக்கப்படும் என அமைச்சர் சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார்.

பெற்றோலிய ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்குவது தொடர்பில், பிரதமரின் செயலாளரினால் எழுத்துமூலம் வாக்குறுதி வழங்கப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பெற்றோலிய துறை தொடர்பாக இந்தியாவுடன் முன்னெடுக்கப்படும் உடன்படிக்கை அரசியல் ரீதியானது என்றும், அதுதொடர்பான உடன்படிக்கையில் ஈடுபட முன்னர் சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் ஏனைய தரப்புகளுடன் கலந்துரையாடப்படும் எனவும் பிரதமரின் செயலாளர் உறுதியளித்துள்ளார்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.