தாயகம்

சமுர்த்திக் கூட்டத்திற்குச் சென்று கொண்டிருந்த மூன்று பிள்ளைகளது தாயார் ஒருவர் சடுதியாக மயங்கி விழுந்து மரணம்-கிளிநொச்சி

கிளிநொச்சி - குமாரசாமிபுரம் பகுதியில் நேற்று மாலை 4.15 மணியளவில் சமுர்த்திக் கூட்டத்திற்குச் சென்று கொண்டிருந்த மூன்று பிள்ளைகளது தாயார் ஒருவர் சடுதியாக மயங்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து அவரது உறவினர்களும் அயலவர்களும் அவரை வைத்தியசாலைக்கு உடனடியாக எடுத்துச் சென்ற போதிலும், தருமபுரம் வைத்தியசாலையை அடையும் முன்னரே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் இறக்கும் போதுகர்ப்பிணியாக இருந்தமையால் சட்டவைத்திய விசேட நிபுணர், பிரேத பரிசோதனையை மேற்கொள்வது அவசியம் ஆதலால்,சடலம் அனுராதபுரம் வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Powered by Blogger.