தாயகம்

திருகோணமலை துறைமுகத்தின் இணைந்த அபிவிருத்திக்கான ஒப்பந்தம் இந்தியாவுடன்

திருகோணமலை துறைமுகத்தின் இணைந்த அபிவிருத்திக்கான ஒப்பந்தம் இந்தியாவுடன் செய்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் இலங்கை வரும் போது, இந்த உடன்படிக்கை கைச்சாத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, ஹம்பந்தொட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சீனாவிடமிருந்து முன்னாள் அரசாங்கம் பெற்ற பெரும் கடன்களில் இருந்து மீளமுடியாத நிலையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Powered by Blogger.