தாயகம்

பேராதனை பல்கலைக்கழகம் அடுத்தவாரம் மீண்டும் திறப்பு

மாணவர்கள் மத்தியில் பரவிய காய்ச்சல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட பேராதனை பல்கலைக்கழகம் எதிர்வரும் 18 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வைத்திய ஆலாசனையின் பிரகாரம் பல்கலைக்கழகத்தை மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துணைவேந்தர் பேராசிரியர் உபுல் திசாநாயக்க கூறியுள்ளார்.

இதேவேளை காய்ச்சல் பரவியதன் காரணமாக மூடப்பட்ட ருகுணு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடம், தொழிநுட்ப பீடம் உள்ளிட்ட அனைத்து பீடங்களும் நாளை (17) மீள திறக்கப்படும் என துணைவேந்தர் பேராசிரியர் காமினி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.