அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களிலும் கழிவுப்பொருட்கள் அகற்றும் நடவடிக்கையை அத்தியாவசிய சேவையாக மாற்றுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விசேட வர்த்தமானி ஊடாக உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு 12 மணி முதல் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.
பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் 17 ஆவது சரத்திற்கு அமைய, ஜனாதிபதியினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, உள்ளூராட்சி மன்றத்தினால் முன்னெடுக்கப்படும் கழிவுப்பொருள் அகற்றல், சேகரித்தல், தற்காலிகமாகக் களஞ்சியப்படுத்தல், வேறுபடுத்தல், தெருக்கள் – வீடுகளில் உள்ள கழிவுப்பொருட்களை அகற்றல் ஆகியவை தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் இந்த உத்தரவில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள நபருக்கோ சொத்துக்களுக்கோ எவரேனும் ஒருவர் பாதிப்பை ஏற்படுத்துதல், அச்சுறுத்தல், தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி அவருக்கு இடையூறு விளைவித்தல் குற்றமாகக் கருதப்படும் என குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Home / தாயகம்
/ கழிவுப்பொருட்கள் அகற்றும் நடவடிக்கையை அத்தியாவசிய சேவையாக மாற்றுமாறு ஜனாதிபதி உத்தரவு
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 comments:
Post a Comment