தாயகம்

விமல் வீரவன்சவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட ஏழு சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் லால் ரணசிங்க பண்டார, கறுவாத்தோட்ட பொலிஸாருக்கு இன்று உத்தரவிட்டார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரது இலங்கை விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தியமை தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு பெப்ரவரி 6 ஆம் திகதி கொழும்பு 7, பௌத்தாலோக்க மாவத்தை மற்றும் ஹெவ்லொக் வீதியை மறித்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, கறுவாத்தோட்ட பொலிஸாரால் பி அறிக்கை மூலம் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், பிரதம நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.