உலகம்

இரண்டே நாளில் 6,100 கோடி ரூபாய் சம்பாதித்த தமிழர்

பங்குச் சந்தையில் பலரை நஷ்டம் அடைந்து தான் பார்த்திருப்போம், ஆனால் அதே பங்குச் சந்தையில் இரண்டு நாட்களில் 6100 கோடி ரூபாய் ஒருவர் சம்பாதித்துள்ள சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அவென்யூ சூப்பர் மார்ட்ஸ் நடத்தி வருபவர் ராதாகிருஷ்ணன், அண்மையில் இவரது பங்கு வெளியீடை வெளியிடப்பட்டது.

இந்த நிறுவனத்தில் வர்த்தக பணிகள் சிறப்பாக உள்ளது என்று கூறப்பட்டதால், நிறுவனத்தின் பங்குகள் எதிர்பார்த்ததைவிட இரண்டரை மடங்கு முதலீட்டாளர்கள் வாங்கினர்.

அதிக வரவேற்பு காரணமாக முதல் நாளில் ரூ.299 என்ற அடிப்படை விலைக்கு விற்பனையான இந்த நிறுவனத்தின் பங்கு இரண்டே நாட்களில் பங்கு ஒன்றின் விலை ரூ.750.50 ஆக உயர்ந்ததுள்ளது.

இதனால் இந்த நிறுவனத்தின் 82.2% பங்குகளை வைத்திருந்த ராதாகிருஷ்ணனின் குடும்பத்தின் சொத்து மதிப்பு 2 நாளிலேயே, ரூ.6100 கோடி மதிப்புடையதாக மாறியுள்ளது என்று கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

Powered by Blogger.