தாயகம்

காணாமற்போன 115 பேரின் விபரங்கள்

கடந்த 2 ஆம் திகதி வவுனியாவிற்கு சென்றிருந்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, காணாமற்போனோரின் உறவினர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்திற்கு சென்று அவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

இதன்போது, காணாமற்போனோர் தொடர்பான விடயங்களை வட மாகாண சுகாதார அமைச்சின் மூலமாக தன்னிடம் கையளிக்குமாறு காணாமற்போனோரின் உறவினர்களிடம் அமைச்சர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதற்கமைய, வவுனியாவில் காணாமற்போனோரின் உறவினர்கள், வட மாகாண சுகாதார அமைச்சரின் இணைப்பு அலுவலகத்தில் காணாமற்போன 115 பேரின் விபரங்களை இன்று கையளித்தனர்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.